பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

81





மார்ச் 5


சினந்தவிரப் பணித்துச் செயலில் ஊக்குக!

இறைவா, காமனைக் கனன்னு எரித்தாய். காலனைக் காலால் உதைத்தாய். ஆனால் நின்பால் தொழும்பு பூண்டவர்களிடத்தில் நீ சினந்ததே இல்லை. அவர்கள் மிகை செய்த போதும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருந்தனை. உனக்குச் சினம், பகைவர்மாட்டே தொழும்பர் மாட்டு இல்லை. ஆனால், இறைவா, என் சினம் இனம் பார்க்காமல் கிளர்ந்தெழுகிறது. தொழும்பாய்த் தொண்டு செய்வார் மாட்டும் சினம் வருகிறது. பாழாய்ப்போன சினத்தை அடக்க முடியவில்லை.

ஆனால், இறைவா! ஒரு பொழுது கூட காரணமின்றிச் சினம் இல்லை! காலத்தில் செய்யாமை, முறையாகச் செய்யாமை, திறம்படச் செய்யாமை, முழுமையாகச் செய்யாமை, பயனுறச் செய்யாமை ஆகியனவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவா! நானும், மற்றவர்களும் மண்ணில் கையைப் பயன்படுத்தி-உழைப்புப் போர் செய்தால்தானே உண்ணலாம், வாழலாம்.

இறைவா! எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. முறையாக வேலை செய்யாதவர் மீதுதான் கோபம். இது தவறா? இறைவா! நல்ல ஆலோசனை, சொன்னால் நடவாது என்கிறாய். உடனிருந்து செய், ஊரே செய்யும் என்கிறாய். இறைவா இன்று முதல் செய்கிறேன். பணிக்காலத்தில் அனைவருடனும் நின்று ஒத்துழைத்துப்பணிகளை முடிக்க அருள் பாலித்திடுக! சொல் செயலினைப் பயவாது. செயலே, செயலினைப் பயக்கும், நல்ல புத்திமதி. இறைவா அருள் செய்க!

கு.x.6