பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

163


தமிழகத்தின் சமய அரங்குகளில் இவர்கள் “செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்” என்ற சேக்கிழார் பாடலுக்கு ஆவியுலகக் கருத்தைக் கருவியாகக் கொண்டு விளக்கியருளும் பாங்கு பாராட்டு தலுக்குரியது.

இத்திருமடத்து ஞானபிடத்தின் வழித்தோன்றலாக, இளவரசாக எழுந்தருளியிருப்பவர்கள் திருவருள் திரு. அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். செந்தமிழ் ஆர்வமும் திருத்தொண்டு நெறியில் நிற்கும் பண்பும் உடைய இவ்விளவரசு அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.

சைவத் திருமடங்களில் திருக்கயிலாய பரம்பரை என்று வழங்கப் பெறும் ஆதீனங்களின் உபதேச பரம்பரை, கயிலையிலிருந்து தோன்றியதாகும். திருக்கயிலாய பரம்பரை, திருக்கயிலாயத்தின் அருள்வடிவாய் கல்லாலமர நிழலில் அமர்ந்து அதோ முகப்பரமனிடமிருந்து திருநந்தி தேவர் சிவஞான உபதேசம் பெற்றார். அக்குருபரம்பரையில் வந்த அகச்சந்தான தேவர்கள், 1. திருநந்திதேவர், 2. சனத்குமாரர், 3. சத்தியஞானதரிசனி, 4. பரஞ்சோதியார். புறச்சந்தான குரவர்கள் 1. மெய்கண்ட தேவர், 2. அருணந்திசிவம், 3. மறைஞான சம்பந்தர், 4. உமாபதி சிவம். இந்தச் சந்தான குரவர்களில் அருணந்தி சிவாச்சாரியாரின் 49. சீடர்களில் ஒருவராக விளங்கிய தெய்வசிகாமணி குருமூர்த்திகளின் ஞானப் பெருக்கில் தோன்றியது, திருவண்ணாமலை ஆதீனம். இன்று அது குன்றக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு பணி செய்வதால் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் என்று அழைக்கப் பெறுகிறது. இத்திருமடம் சிவஞான சித்தியாருக்கு உரைகண்ட ஞானப்பிரகாச முனிவரைப் பெற்றது.