பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

181


ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே

(திருச்சதகம். 82)

என்பார். சித்தாந்தச் செந்நெறிகளின்படி கடவுள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுவோன் அல்லன். ஆதலால் விருப்பு வெறுப்புகள் மிகுதியும் உடைய உலகியல் நிகழ்வுகள், உயிர்களின் நிகழ்வே தவிர கடவுளின் நிகழ்வுகள் அல்ல. அந்நிகழ்வுகள் அவனுக்குத் தெரியாதனவுமல்ல. சித்தாந்தச் செந்நெறியின் கடவுளாகிய சிவம் அறிவுருத்தன்மையது. சிவமாகிய அறிவுருவுக்குத் தொழிற்பாடு இல்லை. சிவம் தம்மையொத்த தமது எல்லைக்குள் அடங்கிய சக்தியின் மூலம் உலகைத் தொழிற்படுத்துகிறது. சிவம் அறிவுருச் சக்தி இயக்கம். இத்தத்துவத்தின் படிமுறை வளர்ச்சியில் தோன்றி யதே அம்மையப்பன் வழிபாடு. இதனைத் திருக்களிற்றுப் படியார்,

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பார்-அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்
(திருக்களிற்றுப்படியார் 1)

என்று கூறுவது அறிக. சிவம் சக்தியை, பண்பு-பண்பியாகச் சிலர் விளக்கம் கூறிக் குழப்புவர். அஃது உண்மையன்று. சிவமும் சக்தியும் இரு வேறு பொருள். ஆனால், சக்தி சிவத்தின் குறிப்பின் வழி இயங்கும் தன்மையது. அம்மையப்பர் இரு வேறு நிலையினர் என்பதை உணர்த்தத்தான் போலும், திருவாசகம்,

குவளைக் கண்ணிக் கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க

(திருவண்டப்பகுதி 64,65)

என்றும், திருஞானசம்பந்தர்,