பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



3. சைவ சித்தாந்தமும் சமுதாய
மேம்பாடும்

மானிட வாழ்க்கை விபத்துக்களால் வந்ததன்று. மானிட வாழ்க்கை திட்டமிடப் பெற்ற குறிக்கோளுடையது; உயர் நோக்கமுடையது. மானிட வாழ்க்கை உறுப்புக்களாலாய வாழ்க்கை மட்டுமன்று; உணர்வுகளாலாய வாழ்க்கையுமாகும்.

உணர்வுகள், ஒழுக்க நெறிகளாகி உறவுகளை வளர்த்து உறுதிப்படுத்த வேண்டும். உறவார்ந்த மானிட வாழ்க்கையில் நயத்தக்க நாகரிகம் இடம் பெறுதல் வேண்டும். பண்பாடு நிலைபெற்று நிலையிலா உலகத்திற்கு நிலையான தன்மை நல்க வேண்டும். மானிட வாழ்க்கை முழுமையடைவது சான்றாண்மையிலேயாம். சான்றாண்மையே வாழ்க்கையின் இலக்காகிய தூய இன்ப அன்பினில் திளைத்தலைத் தரும்.

இன்ப அன்பை அடைவதற்குரிய வாயிலே வாழ்க்கை. உடல், உயிர் உணர்வு ஆகிய அனைத்திற்கும் நற்பயன்கள் கிடைக்குமாறு செயல்கள் செய்து வாழ்வதே வாழ்க்கை இவற்றுள் ஒன்றிற்குப் பயன் கிடைத்து, ஒன்றிற்குப் பயன் கிடைக்காது போனாலும் வாழ்க்கை வாழ்க்கையன்று; குறையுடைய வாழ்க்கையால் பயன் இல்லை. உடலின் திறம் வளர்ந்து உணர்வுகள் சிறந்து உயிர் சிறப்புறு நலம் பெற வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல்.

மனித குலத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழி நடத்தவே சமயங்கள் தோன்றின; முயன்றன. இத்துறையில் சமய நெறிகள் வெற்றிகள் பெற்று வாழ்வித்த, வரலாறுகளும் உண்டு; தோல்விகளை அடைந்ததும் உண்டுச்மயநெறிகளின் தோல்வியால் மானிட சாதி அடைந்த துன்பங்கள் அளப்பில் பொதுவாக,