பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளரும்; நிலையான வளர்ச்சி பெறும். உயிர்க்கு உறுதி பயக்கும். தொழிற்படுதல் உயிரின் இயற்கை.

சமயநெறியின் சீலம், உயிர் நலம் காக்கும் பாங்கு ஓயாது தொழிற்படுவதில்தான் இருக்கிறது. தற்சார்பு நிலையில் தொழிற்படுவது “தொழில்” ஆகும். சமயச்சார்பில் திருவருள் சிந்தனையுடன் உயிர்க்குலத் தொகுதி நலம் பெற வேண்டும் என்று செயற்படுதல் தொண்டு ஆகும். தொண்டு நெறி நிற்றலே உயிர்க்கு ஊதியம் பெறும் நெறி.

தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
(அடங்கன்முறை பாட்டு)

என்பது அப்பரடிகள் வாக்கு. செய்யும் செயல்கள் உயிர்க்குப் பயன்தந்து விடுவனவல்ல. உயிர்க்குப் பயன்களைத் தந்து வாழ்விப்பது செய்யும் செயல்களின் நோக்கமேயாகும். தீய நோக்கத்தோடு-நற்செயல் செய்தாலும் தீமையே விளையும். இறைவன் மீது மலர்க்கணை தொடுத்த காமவேள் தண்டனையையும், மறவாது கல்லெறிந்த சாக்கிய நாயனார் இன்புறுதலையும் பெற்றமை இதற்குச் சான்று செயலுக்குரிய நோக்கமே முதன்மையானது. ஆதலால் நல்நோக்கத்தோடும், சிவசிந்தனையோடும் அயர்விலாது தொண்டு நெறியில் நின்று வாழ்தலே சமய வாழ்க்கை தொண்டு நெறியில் நின்று வாழ்தல் உயிரை வளர்க்கும்; பாதுகாக்கும். தொண்டின் நெறி, வாழும் சூழ்நிலையையும் இனியதாக அமைக்கும்.

உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்