பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




4


கொடியா? கொம்பா?


சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயமா? அரசியலா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். முன்னேற்றம் அடையவேண்டும் - வாட்டுகிற வறுமையையும் - அல்லற் பாதையில் அழைத்துச் செல்லும் அறியாமையையும் அகற்றிப் புதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு அரசியலுக்கு இருக்கிறதா? அல்லது சமய நெறிக்கு இருக்கிறதா? என்பதே கேள்வி!

மனிதர்கள் மோட்சத்திற்குப் போகவேண்டும் என்ற பிரசாரத்திற்காக மட்டும் இது தரப்பெறவில்லை. வீடுபேறு மனிதனாக முயன்று பெறுவதல்ல. மனிதன் மனிதத் தன்மையோடு-அறவுணர்வோடு-அருளியல் சகிப்போடு கூடி வாழும்போது அவனுடைய வாழ்வு முழு நிலை எய்துகிறது. அதுபோது இறைவன் தகுதி நோக்கி அளிப்பது வீடு. மனிதனை மனிதனாக மதித்த அவனுடைய முன்னேற்றத்துக்கும் இம்மைக்கும் உதவுவது எது?

தலைப்பில் உள்ள மிகமிக என்ற சொற்களை ஆராய்ந்தால் கொடி தேவையா? கொம்பு தேவையா? என்பதல்ல கேள்வி? எது மிக மிக அவசியமானது? என்பதே விவாதத்துக்குரிய குறிப்பு என்பது பெறப்படும்.