பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யார்க்குத் துணி துவைத்துக் கொடுத்துப் பரமன்பதம் அடைந்தார். நாமெல்லாம் நாயன்மார்களின் குருபூசை களைக் கொண்டாடுகிறோமே தவிர அக்கொண்டாட்ட நாளில் தேவையானவற்றைச் செய்வதில்லை.

கண்ணப்பநாயனார் குருபூசையில், கண்பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கி வழங்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டால் எவ்வளவு நன்மைபெருகும். நாம் கைக்கொள்ளவேண்டியது நால்வரின் நெறி. நால்வரின் இயக்கம் சமுதாய இயக்கம். நால்வரின் வழிச்சென்றால் நம்மிடையே ஒரு ஒழுங்கு உண்டாகும். நமது மதம் இப்போது ஒழுங்கில்லாமற் கிடக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட மதமாக நமது மதம் மிளிர வேண்டும். வெள்ளையன் தனது மதமான கிறித்தவத்தைத் தவிர்ந்த ஏனைய மதங்களை ஒன்றாக்கி இந்துமதம் என அதற்குப் பெயரிட்டான். இதனால் சில தனித் தன்மைகள் கெட்டுவிட்டன. கலப்பு ஒருபோதும் தனித் தன்மைகளைக் காப்பாற்ற உதவாது. மற்றைய மதங்களிடையே உள்ள ஒழுங்கு நம்மிடையே இல்லை. பன்னிரண்டு இலட்சம் இந்துக்களும் ஒன்றானால் ஒருநல்ல விழுமிய ஒழுங்கு உண்டாகலாம். அப்பொழுதுதான் மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்க வழியுண்டாகும்.

நாம் மதம் மாறியதைப் போன்று வேறுயாராவது மாறி யிருக்கிறார்களா? நம்மிடையே எண்ணத்தொலையாத எத்தனையோ பேர் மதம் மாறியிருக்கிறார்கள். நம்முடைய மதத்துக்கு வேறு மதத்தவர்கள் வந்ததுண்டா? நம்மைப் பொறுத்த அளவில் மதமாற்றம் சர்வசாதாரணமாகி விட்டது. இந்நிலைமாற சைவத்தமிழுலகம் பாடுபடவேண்டும். சிவநெறி பரப்பும் மடங்கள் ஆன்மாவுக்குத் தலைவனான ஆன்மநாயகனை வழுத்துவதோடு நின்றுவிடுவதற்கில்லை. திருமடங்கள் திருத்தொண்டால் சிவநேயச்செல்வர்களை உருவாக்கவே எழுந்தவை. எந்நாளும் சமயப்பிரச்சாரம் செய்து சித்தாந்த சிவவழி நிற்கவே அவை உதவுகின்றன. மனித குலத்துக்கு மாண்புறு தத்துவங்களைப் போதிக்கவே