பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

435


சமுதாயப் பசியை, நாட்டுச் சிக்கல்களை எண்ணிய படியே புராணங்களை அணுக வேண்டும். நாம் பெரிய புராணத்தை அத்தகைய எண்ணங்களோடுதான் பார்க்கிறோம். பெரிய புராண அடிகளை ஆழச் சிந்தித்தால் மனித விடுதலைப் போராட்டம் நன்கு புலனாகும், மண்ணகத்தை விண்ணகமாக்க எழுந்த காவியமே திருத்தொண்டர் புராணம். அரசியல் வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும் நாம் அதில் காணமுடிகிறது. மனிதவாழ்வின் எல்லாத் துறைகளையும், அலசி ஆராய்ந்து செய்திகளை வெளியிட்ட வாழ்வு நூல் பெரிய புராணம். பெருமான், அர்ச்சனை பூசைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர் அல்லர். அவர் அடியார்க்கு வேலையாளானவர். தூதுவரானவர். இரவோடு இரவாகத் தன் தோழனுக்காக ஒரு பெண்ணிடம் தூதுசென்றிருக்கிறார். இத்தகைய செய்திகள் பெரிய புராணம் வாழ்க்கையை ஒட்டியது-வாழ்வோடு பிணைந்தது என்பதைக் காட்டி நிற்கின்றன.

மனித இனத்தை வறுமையினின்றும் மீட்டு ஈடிலா இன்ப வாழ்வு வாழ வழிகாட்ட வேண்டுமென்ற ஒப்பில்லா உயர்ந்த எண்ணத்தைப் பெரிய புராணம் தருகின்றது. “வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி” என்கின்றது சித்தியார். வறுமை வாழ்வைச் சிதைத்து, மாற்றம் செய்கின்றது. வறுமையால் வரும் சிறுமையை விலக்கவேண்டும். மன்றுளார் அடியார் வரலாறான பெரிய புராணம் உணர்ச்சி, குரோதம், ஆத்திரம் போன்றவைகளை விலக்கி விட்டுப் படிக்க வேண்டிய ஒரு தெய்வ நூல். செழுமையான நிலத்தில்தான் பயிர் நன்றாகச் செழித்து வளரும்; உள்ளத்தின் செழுமையில்தான் உண்மைத் தத்துவங்களின் வளர்ச்சி தங்கிக் கிடக்கின்றது.

மன்றுளார் அடியார்கள் பொது மக்களுக்கு உரியவர்கள்: பொது வாழ்வைப் பற்றிச் சிந்தித்தவர்கள்; எப்பொழுதும் எம்