பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

101


காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடை சேடர்வாழ் திருவுசாத் தானமே.

(திருமுறை 3.33. திருவுசாத்தானம்)

29. ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும்-நீடுகின்ற
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென்
றாற்பூசை ஒம்புதற் கியார்தான் உவவாதார்

(திருவருட்பா, நெஞ்சறிவுறுத்தல். கண்ணி 257-259)

30. ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடையக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”.

(ஆறாம் திருமுறை 938)

31.சிவனெனும் மொழியைக் கொடிய சண்டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனொடு கலந்து பேசுக அவனொடு
அருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
சிவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசை யாண்டகையே.

(கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி)

32. தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ?-எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குலமாக்கிட
மேலும் சமர்த்திலையோ?

(பாரதிதாசன் கவிதைகள், சமத். 14)

33.பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள்)