பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

113




“மனித சிந்தனை முடிவில்லாமல் சதாகாலமும் தோற்றத்திலிருந்து சாராம்சத்திற்கு முதல்நிலையான சாராம்சத்திலிருந்து அடுத்த உயர்ந்த நிலையிலான சாராம்சத்திற்கு மேலும் மேலும் ஆழமாகச்செல்கிறது; அவ்வாறாக முடிவின்றிச் சென்று கொண்டேயிருக்கிறது”12 என்று லெனின் கூறுகிறார்.

சைவ சித்தாந்தம் மனித அறிவின் எல்லை மிக வேண்டுமானால் அல்லது சிற்றெல்லையைக் கடந்தாக வேண்டுமானால் எல்லையற்ற கடவுளைத் துணையாகப் பெற்றால் மனிதன் அறிவு சிற்றெல்லையைக் கடந்தும் வளரும் என்று கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் சிவ ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் முதலிய ஞானாசிரியர்கள் ஐந்தொழிலும் நிகழ்த்தியதாகத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. அது மட்டுமல்ல. சிவஞானம் பெற்றவர்களுடைய வாக்குகளும் இறைவன் அருளிச் செய்யும் வாக்குகள் போலவே கருதப்பெறும் என்று திருமுறை கூறுகிறது.

“எனதுரை தனது ரையாக
நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலன்”13

என்பதறிக. சிவஞானம் பெற்றவர்களுடைய கரணங்கள், சிவத்தன்மையடைந்த கரணங்கள் என்பதைத் திருக்களிற்றுப் படியார்,

“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்”14

என்று அருளிச் செய்துள்ளமையும் அறிக.

சித்தாந்தக் கருத்துப்படி உயிர், சிவத்தின் துணையோடு தனது அறிவை வளர்த்து ஞானமாக்கிக் கொள்ளும்பொழுது அத்தகைய ஞானத் தன்மையடைந்த உயிர், ஒரோவழி உலகியல் நன்மைகள் செய்தாலும் பெரும்பான்மையும்