பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

131


துன்புறுத்துகிறான் ஆயினும் நீதி வெற்றி பெறுகிறது. மார்க்சு, புரட்சியைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு மனிதனின் குணங்கள் மாறும் வரைக்கும் வலிமை சான்ற ஆட்சி வேண்டுமென்கிறார். காலப்போக்கில் அரசே இல்லாத - மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் சமுதாயம் காண வேண்டும் என்பதுதான் மார்க்சியம்.

“உற்பத்தியாளர்கள் சுயேச்சையாகவும் சமத்துவ முறையிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அடிப்படையில் உற்பத்தியை ஒருங்கமைக்கும் சமுதாயமானது அரசு இயந்திரம் முழுமையையும் அது அப்பொழுது எங்கு போய்ச் சேரவேண்டுமோ அங்கு - அதாவது தொல் பொருள்களின் கண்காட்சியில், நூற்பு, இராட்டை, வெண்கலக் கோடரி ஆகியவற்றின் அருகில் கிடத்தி வைக்கும்”44

என்பது காண்க.

இந்தக் கருத்திலும் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒரு திசையிலேயே நம்மை வழி நடத்திச் செல்கின்றன; மாறுபாடு இல்லை. இந்நிலை வரவேற்கத்தக்கது.

பொருள் முதல் வாதமும் சார்ந்ததன் வண்ணமும்

அடுத்து மிக முக்கியமான ஆய்வு மார்க்சின் பொருள் முதல் வாதம். அதாவது ஒரு மனிதனின் சிந்தனை, கருத்து, அறிவு, உணர்வு, ஒழுக்கம் ஆகியன அவனுடைய பொறிகளின் வாயிலாக - புலன்களின் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் பொருள்களிலிருந்து வந்து அமைகின்றன என்பது பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.

“ஒரு புறநிலைப் பொருள் தனி மனிதனுடைய மூளையில் புலனுணர்வும், புலனறிவுகள், அறிவிப்பு, தெரிவிப்புகள், கருத்துருவங்களின் வடிவத்தில் உள்ளத்தின் அளவில் மறுபதிப்பு செயப்படுவது என்பதை அடிப்