பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




[1]வாழ்வும் வளமும்


உலகில் சமா தானம் நிலை பெறவே மாந்தன்
உண்மையில்போ ராடநினைக் கின்றான்': ஆனால்
கலகவிவ காரத்தில் வாழ்நா ளெல்லாம்
கழிக்கின்றான்; அந்தோ! நன் மகிழ்வைத் தேடி
அலைகின்றான்; ஆனால் பாக் கியமில் லாமை
அலைக்கின்ற துன்பம் இவை கடக்க லானான்!
நிலையான பொருளாக்கம் ஆன்ம மேன்மை
நேசித்தும் அவன்வறுமை தனில்ஆழ் கின்றான்!

இந்தஉல கத்தில் உள்ள பொருள்க ளெல்லாம்
இயற்கையிலே முறையாக வளர்ந்து உயர்ந்து
வந்து, பல மாற்றங்கள் அடையும்! ஆனால்
மனிதன் மட்டும் திறமையொடு பிறக்கின் றான்காண்!
இந்தஉல கப்பொருள்கள் யாவற் றுக்கும்
தலைமையினை ஏற்கின்ற தகுதி பெற்றான்!
அந்தமனி தன்பெருமை ஒருவ ராலும்
அளந்துவிளக் கிடஇயலா அருமைத் தாகும்!

மனிதனது ஞானம் எல்லா ருடனும் எல்லை
வரையறைகள் ஒதுக்கங்கள் யாது மின்றிப்
புனிதமொடு பகிர்ந்துகொள்ளத் தக்க தாகும்;
போந்தமனி தப்பிறவிக் குரிய செய்தி
நனிவிழிப்பாய் எப்போதும் இருப்ப தாகும்;
நாளும் அவன் இலக்கு, மேம்பா டுறுத லாகும்;
எனின் அந்தப் பொழுதில்தான் உண்மை யான
பயன்பாட்டு மனிதனென ஏற்றம் கொள்வான்!


  1. *கோவை அகிய இந்திய வானொலியில் 14-1-1986-இல் ஒலிப்பரப்பானது.