பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசீர்வாதப் பேருரை

285


நல்வாழ்வு வாழ்ந்து, பேரின்பப் பெருநிலையை எய்துதலே மக்கள். வாழ்க்கையின் குறிக்கோள்.

குருவழிபாடு

சைவத் திருநெறியில் குருவழிபாடு முதன்மையாகவும் சிறப்பாகவும் எடுத்துப் பேசப் பெற்றுள்ளன. சிவம் உயிர்களுக்கு அதனியல்பை, சிறப்பியல்பை உணர்த்தும். சிவம் உயிர்களுக்கு மூன்று வேறு விதங்களாய் உணர்த்தும். இருமலமுடைய பிரளயாகலருக்கு அது போதாது. அவ்வுயிர்களுக்குச் சிவன் தன் இயற்கை வடிவோடு முன் நின்றுணர்த்தும். இவ்வுபதேசமும் மும்மலத்தவருக்குப் போதாது. இவர்களுக்கு நூல்முகமாயும், அநுபவமுகமாயும், உணர்த்த வேண்டும். இவர்களுக்கு உணர்த்துவதற்காகச் சிவம் குருவடிவத்தில் தங்கி நின்று நூல் முகத்தாலும் அநுபவமுகத்தாலும் உணர்த்தும். இங்ஙனம் சிவம் கருணையுள்ளங் கொண்டு நம்மனோர் போல எழுந்தருளி, நமது வாழ்க்கையைச் சிவஞானப் பெருவாழ்வாக ஆக்குகின்றது. இக்கருத்தினை நகர்த்தார் குலத்துதித்த சிவஞானச் செல்வராம் சொக்கலிங்க ஐயா அவர்கள், நமது திருவண்ணாமலை ஆதீன பிரதிஷ்டாபகர்களாகிய பிரதம பரமாசாரிய குரு தெய்வசிகாமணி சுவாமிகளைத் துதிக்கின்ற பாடல் ஒன்றிலே விளக்கிக் காட்டியுள்ளார்கள், மும்மலத்தவருக்கு அருள் பாவிப்பதற்காகச் சிவபெருமானே மாந்தர் உருக்கொண்டு, அருணையில் அமர்ந்தார். மக்கள், மனிதன்தானே என்று எள்ளி இடர்ப்படாவண்ணம், காப்பதற்காகத் தமது இயற் பெயரையே கொண்டார். தன்னைச் சார்கின்ற சீவர்களைச் சிவமாக்குகின்றர். அங்ஙனம் செய்வதினாலே மாந்தரது விகார உணர்ச்சியை எல்லாம் அழிக்கின்ற தேவ சிகாமணி என்று வாழ்த்துகின்றார்கள்.

“அவனியில் மும்மலர்க்கருள அவருருக்கொண்டு
அருணையில் வந்தமர்ந்தும் ஏனோர் புவியுரு