300
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கேட்கப் பெறுகிறது. நூற்றுக்கணக்கான அன்பர்கள் தம்மையும், தம் வாழ்வையும் மறந்து இத்திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நமது இதயம் கலந்த வாழ்த்து. கடந்த மூன்றாண்டுகளாகச் சைவசித்தாந்த சமாஜத்தினரோடு கலந்து உறவாடுகின்ற இன்பப்பேறு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த உறவு முறை இடையீடுபடாது வளரும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டத்தினர் மேற்கொண்டுள்ள பெரும் பணிகளுக்குச் சமாஜத்தினர் பக்கபலமாக இருந்து வருகின்றனர் தொண்டர் குலம் அனைத்தும் ஒன்று என்ற உண்மையை அருள்நெறித் திருக்கூட்டத்தினரும், சமாஜத்தினரும் மெய்ப்பித்து வருகின்றனர். இத்தகு பேரன்பு படைத்த சமாஜத்தினர்க்கு நமது உளம் கலந்த வாழ்த்து. மீண்டும் ஒருமுறை சமயவாழ்வுடையார் அனைவரும் ஒன்றுபடவும் அருள்பாலித்துத் திருத்தொண்டின் நெறிபேணி வளர்க்கத் துணை செய்யும் வண்ணம் ஈரோடையப்பரின் இணையடிகளைச் சிந்திக்கின்றோம்! அன்பர்களது அன்பு பொருந்திய, ஆர்வம் நிறைந்த ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்!
வாழ்க தமிழ்!
வளர்க அருள்நெறி!