பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆயினும், இன்னும் மனிதம் வளர, நம் நாட்டின் சமய ஞானம் துணை செய்யும். துணை செய்யவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை வெற்றி பெற சிந்தனையாளர்கள், செயல் வல்லுநர்கள் துணை செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கை, அழுவதற்காக அல்ல. சென்ற காலத்தில் அழுதது போதும். சென்ற காலத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். முன்னே தோன்றிய பழமையைப் பின்னர் புதுமையாக்கி வாழ்க்கையைப் பயனுடையதாக்கப் பயன்படுத்தப்படுதல் வேண்டும். உயிர்கள் குறைவிலாது வாழ்வதற்குரியனவாகச் செய்தாக வேண்டும். மாந்தரிடத்தில் தோழமைப் பண்பை வளர்க்கவேண்டும். இதனை இன்றைய சமயம் செய்தால் எதிர்காலம் உண்டு.

மெய்கண்டார் விழா, மாமன்னன் இராசராச சோழன் விழா 16-11-92