பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்” — குறள்.

அடுத்து, அவாவை நீக்குதலுக்குரிய வழி! பொருள்கள் வாழ்க்கையில் தேவை என்ற அளவில் மட்டுமே கருதுதல். அதற்குமேல் அந்தப் பொருள்கள் மேல் அளவு கடந்த மதிப்பைக் கூட்டி அப்பொருள்களுக்காக வாழ்தல் இல்லை அல்லது அப்பொருள்கள் இன்றேல் வாழ்க்கை இல்லை என்று கருதாமல் வாழ்வதும் அவாவை நீக்குதற்குரிய வழி.

அடுத்து, மனிதர்களிடத்தில் ஆசை வைப்பது. மனிதர்களிடத்தில் ஆசை வைக்கவேண்டும். ஏன்? நாம் ஆசை வைக்கும் மனிதர்கள் மீது நமக்கு ஏன் ஆசை? நமக்கு வேண்டுவன செய்வார்கள் என்று எண்ணி ஆசைப்படுவது தவறு! மற்றவர்களை அவர்களுடைய நன்மைக்காக ஆசைப்படுவது தவறல்ல. இன்று பலர், நண்பனை நேசிக்கிறார்கள். நண்பனுக்காக அல்ல. தனக்காகவே மனைவியை நேசிக்கிறார்கள். மனைவிக்காக அல்ல. தனக்காகவே நேசிக்கிறார்கள்; ஆசை காட்டுகிறார்கள். இது தவறு. பிறரிடம் பிறர் நலங்கருதி ஆசை காட்டத் தொடங்கினால் ஆசை அகலும். ஏன் திருமூலர்.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்”

என்றருளிச் செய்த பாங்கு அறிக. எத்தை ஈசனிடம் ஆசை காட்டுவோர் இன்று யாருளர்; அவரவர் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களிடம் ஆசை காட்டிச் சென்று பேரம் பேசுவோர் பலர். அன்புநிறைந்த கண்ணப்பரைப் போல, ஈசனிடமே ஆசை காட்டுவோர் சிலரே! பிறர் நலம் எண்ணுந் தொறும் ஆசை அகலும்” அவா அகலும்!