பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருத்தொண்டுப் பயிற்சி

திருக்கோயில் உயர்ந்து விளங்கியது தொண்டின் அமைப்பால்! திருநெறிய திருத்தொண்டு திருக்கோயிலைக் கண்டது. திருக்கோயில் திருநெறிய திருத்தொண்டை வளர்த்தது. திருக்கோயிலைச் சார்ந்து நடைபெற வேண்டிய தொண்டுகள் செய்வதற்குப் பயிற்சிப் பள்ளி ஒன்றைக் கணநாத நாயனார் நடத்தினார். திருக்கோயிலைச் சார்ந்து திருமாலை தொடுத்தல் முதல், சுவைமிக்க திருவமுது படைத்தல் வரை பல்வேறு தொண்டுகள் நடைபெற்று வந்துள்ளன. இதனை,

“ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையில் அமர்பெருந் திருத்தோணி
நாயனார்க்கு நற்றிருப்பணி ஆயின
நாளும் அன்பொடு செய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.”

(பெரி. கணநாதர் - 2)

என்று பெரியபுராணம் பேசுகிறது.

எனவே திருக்கோயில், தொண்டு இயக்கத்தின் மையம் என்பதறிக. திருகோயிலைச் சார்ந்து வாழ்கிறவர்கள் வளமாக வாழத் துறைதோறும் வாயில் அமைத்து வழி செய்தது திருக்கோயிலேயாம்!

உடல் ஊனமுறுதல் வருந்தத்தக்க ஒன்று! உடல் ஊனமுற்றோர் பக்கம் கனிந்த அன்பைக் காட்ட வேண்டும்! அவர்தம் வாழ்க்கைக்குரியன எல்லாம் செய்யப் பெற வேண்டும். இந்த உணர்வு திருக்கோயில் வளாகத்தில் அரும்பி மலர்ந்திருந்தது. திருவாமாத்தூர்த் திருக்கோயிலில், கண்