பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயற்றிய “சித்தாந்த சாராவளி"யின் உரையாசிரியர் அநந்த சிவாசாரியார் ஆகமங்கள் பற்றிக் கூறியுள்ள கருத்து14 கவனத்திற்குரியது. எனினும் சிவாகமங்கள் கொள்ளத்தக்கன அல்ல என்பது நமது முடிவன்று. நாம் சிவாகமங்களை ஏற்புழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கொள்கை சிவாகம வழியில் திருக்கோயில் கால பூசைகள், திருவிழாக்கள், பெருஞ்சாந்தி விழா என்று போற்றப் பெறுகின்ற கும்பாபிடேகங்கள் முதலியன செய்தல் ஏற்புடையனவேயாம். ஆயினும் சதாசிவ மூர்த்தத்தினால் உபதேசிக்கப் பெற்ற சிவாகமங்களைப் போலவே ஸ்ரீ கண்டருத்திர மூர்த்தியால் திருநந்திதேவர் வழியில் உபதேசிக்கப் பெற்று ஒரு ஞானசந்தானம் - ஞான பரம்பரை வந்து கொண்டிருக்கிறது. இந்த ஞானசந்தான வழியினர் மெய்கண்ட சாத்திரங்கள் என்ற ஞானநூல்களையும், பண்டார சாத்திரங்கள் என்ற ஞானப் பனுவல்களையும் செய்தருளியிருக்கின்றனர். அதுபோலவே, அம்மையப்பனாக விளங்கியருளும் பெருமானின் திருவருள் அடியொற்றி நின்று நாட்டில் நடமாடிய-அருள் நிறைந்த சமயாசிரியன்மார்களும், அருளாசிரியன்மார்களும் அருளிய தேவார, திருவாசகமும், இவற்றினைச் சார்ந்து தோன்றிய திருமுறைகளுமான சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் உள்ளன. இவைகள் சிவநெறி சார்ந்த ஞான வழியில் தோன்றிய அருள் நூல்கள். சிவாகமங்களுக்கும் இவைகளுக்குமிடையே மாறுபாடுகள் இருத்தற்கில்லை. திருமுறை நெறிகளுக்கு மாறுபாடாகச் சிவாகமங்களில் ஏதேனும் இருப்பின், அவை இடைச் செருகல் என்று கருதி ஒதுக்கத் தக்கனவே! ‘திருமுறைகளும் பதிவாக்கே’ என்று கொண்டு போற்றுதல் சைவ மரபு.

பரமசிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் நெறிகள் அவ்வக் காலத்திற்கு இசைந்தவாறும், ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தகுதி நோக்கியும் மாறுபடும். அதனால் மிகப் பிற்காலத்தே இதுதான் உய்யும் நெறி என்று இறையருளால்