பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தொய்வு ஏற்படவில்லை. இப்போது தொய்வு ஏற்படுமோ என்ற ஓர் அச்சம் பிறந்திருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கும் முயற்சியில் சர்வோதாய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

நாம் பூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், சர்வோதய தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது தவிர வேறு வழியில்லை. சமுதாய ரீதியாக-சமய ரீதியாக-அரசியல் ரீதியாக அமைந்த அற்புதமான ஓர் விளக்கு சர்வோதயம். விளக்கைச் செய்து கொள்ள முடியாதவர்களாக நாம் இருக்கலாம். விளக்கைச் செய்து கொடுத்த பிறகு அந்த விளக்கை ஏற்றி, இருளைப் போக்கி விளக்கொளியில் வாழ முடியாதவர்களாக இருக்கலாமா?

காந்தியடிகளுக்குப் பிறகு, வினோபாஜி சர்வோதய இயக்கத்தின் தலைவராக விளங்குகிறார். இந்த 20-ஆம் நூற்றாண்டிலேயே-வினோபாஜி நம்மிடையே வாழுகின்ற காலத்திலேயே காந்தியடிகள் காண விரும்பிய சர்வோதய சமுதாயத்தை-புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும். நாமனைவரும் ஓரணியில் சேர்ந்து, அண்ணல் காந்தியடிகளுக்குக் காணிக்கையாக அவரது சித்தாத்தங்களை ஆண்டுக்கு ஒன்று வீதமாகவாவது எடுத்துக்கொண்டு நடைமுறைக்குக் கொணர முயற்சிக்க வேண்டும்.


21. [1]சோஷலிசம்

மிழ் காலத்தால் மூத்த மொழி. கருத்தாலும் மூத்த மொழி. இன்றைக்குச் சற்றேறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தொல்காப்பியம். இன்று தமிழ்


  1. பொங்கல் பரிசு