பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிளர்ச்சியும் ஊக்கமும் தோன்றும். ஆனால், எடுத்த காரியம் கைகூடாது போனாலும் இடையில் இடுக்கண்கள் பல ஏற்பட்டாலும் சோர்வடையாமல் மீண்டும் உழைப்பவனே பொருள் உடையவனாக விளங்க முடியும். பெருங்கதை, ‘ஊக்கவேந்தன் ஆக்கம்போல்’ என்று பேசுகின்றது. ஆதலால் இன்பத்தைக் கண்டு மகிழாமலும், துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமலும் தொடர்ந்து முயற்சித்தலே வாழ்க்கையை வெற்றி முகமாக்கிக் கொள்ளுதற்கு உரிய வழி. சிறந்த முறையில் எண்ணி ஊக்கத்தோடு செயற்பட்டால் காரியம் கை கூடினாலும் கூடாதுபோனாலும் அந்த எண்ணத்திற்கும் ஊக்கத்திற்கும் பயனுண்டு, ‘வாழ்க்கைப் போராட்டங்களில்தான் நற்பண்பு தங்கியிருக்கிறது-வெற்றியிலல்ல’ என்னும் அனுபவ உரை எண்ணி இன்புறத்தக்கது. உலகியல் இயற்கையிலும் செயற்கையிலும் பல்வேறு துன்பங்களால் சூழப்பெற்றது. இச்சூழலை வெற்றிகொண்டு பொருளை உற்பத்திசெய்து குவித்தலின் மூலமே சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க முடியும். தரித்திரத்தைப் பங்கு போடுவதும் மிகச் சிறிதாக இருக்கும் - முடங்கிக் கிடக்கின்ற மூலதனத்தைப் பகிர்ந்துகொள்ளுதலும் சமநிலைச் சமுதாயமல்ல. உழைப்பும் உற்பத்திப் பெருக்கமும் சமநிலைச் சமுதாயத்தின் இரட்டை நாடிகள். பொருள் செய்து குவிக்க வேண்டும் என்ற உள்ளம்உள்ளத் துடிப்பு-உள்ளக் கிளர்ச்சி-ஊக்கம் இல்லாதவர்கள் செல்வமுடையோர் என்ற செருக்கை ஒருபொழுதும் பெறமாட்டார்கள் என்று திருவள்ளுவர் திட்டவட்டமாகக் கூறுகின்றார்.

‘உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு’

–குறள் 598

என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆதலால், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையாகிய பொருளை-அப்பொருள் பற்றிய மதிப்பீட்டை-அப்பொருளைப் பெறுதற்குரிய