நாடு
137
சிறப்புடையன, இவற்றுள் பூம்புகார் நகரம் மிகச்சிறந்து விளங்கியது.
பூம்புகாருக்கும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த வாணிகத் தொடர்புகளை கி.பி முதல் நூற்றாண்டின் தலைசிறந்த யாத்திரை நூலான பெரிபுரூஸ் விளக்கமாகத் தெரிவிக்கிறது.
இந்தப் பிரதேசத்தின் வாணிகச் சந்தை கூடும் நகரங்களில் டிமிரிகாவிலிருந்தும்[1] வடக்கிலிருந்தும் உள்ள துறை முகங்களிலிருந்து[2] வரும் கப்பல்கள் தங்குவதற்கு வசதியான இடங்களில் முதன்மைத்தானம் வகிப்பது காமாரா[3] என்ப தாகும். அதற்கடுத்தது பொதுகா[4] என்பது, அதற்கடுத்தது சோபடனா[5] இவற்றில் அந்நாட்டுக் கப்பல்கள் கடலோரமாக டிமிரிகா வரையிலும் சென்று தங்குகின்றன.
ஒரே மரத்தில் செதுக்கப்பட்ட ஒரு கட்டையுடன், மற்றொரு மரத்தில் செதுக்கப்பட்ட வேறொரு கட்டையைப் பிணைத்து விடப்பட்டதே பெரிய கப்பல் என்று வழங்கப்படும்.
இதன் பெயர் சங்காரா[6] என்பதாகும். ஆனால் கிரிஸே,[7] கங்கே,[8] முதலிய நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் கொலாண்டியா[9] என்று வழங்கப்படுகின்றன. அவை பார்வைக்குப் பெரிய உருவம் படைத்தனவாகவும் காட்சி-