பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

555


புரட்சியாளர்களின் கருவியாகத் திருக்குறள் இடம் பெறவில்லை. திருக்குறள் கற்றவர்கள், கற்பவர்கள் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தவில்லை. மாற்றம் அவர்களின் விருப்பமாக இல்லை. ஏன்? திருக்குறள் உரைகளால் விளைந்த தீமை இது. இன்று பேரவை என்ன செய்ய வேண்டும்?

திருக்குறளைத் தொடர்ந்து ஆழமாகச் சிந்தனை செய்யுங்கள். சமுதாய மாற்றத்திற்குரிய சிந்தனை தோன்றும்! அத்திசையில் முயற்சி செய்யுங்கள்! சாதி மத வேற்றுமைகளை எதிர்த்துப் போராடுங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் நெறியை வெற்றி பெறச் செய்யுங்கள். நிச்சலும் கொல்லும் வறுமையை எதிர்த்துப் போராடுங்கள். 'செய்க பொருளை' என்ற வாழ்வியல் நெறியைப் போற்றுங்கள்! இத்துறைகளில் வெற்றி பெற்றாலே தமிழகம் வெற்றி பெறும். திருக்குறள் படைப்பின் நோக்கமும் கைகூடும்.

இனிய அன்புடையீர்,

திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்குகளை நடத்துங்கள்! மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்குங்கள்! திருக்குறள் வெற்றி பெறும்! அதுதான் திருக்குறள் பேரவையின் குறிக்கோள்! கடமை!

85. [1]மருவுமின் மாண்பார் அறம்

"இன்று கொல் அன்று கொல் என்று கொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்

என்பது நாலடியார்.


  1. சென்னை வானொலிப் பொழிவு