பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

61


கொடுக்கின்ற நால்வர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை ஊராட்சி மன்றம் நியமித்துக் கொள்ள வேண்டும்.

அ. ஊராட்சி மன்றம் தனக்கு ஒத்திணைந்து வரக் கூடிய ஒருவரை நியமித்துக் கொள்ளும் உரிமை பெற்று இருக்கவேண்டும்.

ஆ. அப்படி நியமித்துக் கொள்ளும் அலுவலரின் மாறுதல் ஊராட்சி மன்றத்தின் இசைவைப் பொருத்ததாக அமைய வேண்டும்.

இ. மற்றும் ஒரு முழு நேர எழுத்தர் ஊராட்சி மன்றத்திற்கு நியமனம் செய்யவேண்டும்.

ஈ. மேலும் ஒரு கடைநிலை ஊழியர் பல்துறைப் பணியாளராகப் பணி செய்யக் கூடியவர் தேவை.

மைய-மாநில அரசுகளின் உதவி

7. பஞ்சாயத்தின் நிதி ஆதார வளர்ச்சிக்கு, முதலில் மைய அரசும், மாநில அரசும் பங்களிப்புத் தொகை மான்யமாகத் தரவேண்டும்; நீண்டகாலக் கடனும் தந்து உதவ வேண்டும். நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்ளும் இனங்களுக்கு மதிப்பீட்டின் அடிப்படையில் 75% தந்து உதவ வேண்டும். (50% மான்யம், 25% நீண்டகாலக்கடன்) 25% ஊராட்சி மன்றத்தின் பொறுப்பாக அமையவேண்டும்.

8. ஊராட்சி மன்றங்கள் தற்சார்பான நிதி ஆதாரங்களை அடையும் வரையில், ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு நடைமுறைச் செலவுக்கு மான்யமாக ஊராட்சியின் வருவாய் அடிப்படையில் 1:2 தந்து உதவ வேண்டும். இவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்குத் தந்து உதவவேண்டும்.

பஞ்சாயத்தின் நிர்வாகத்தில் வரவேண்டியவை

9. பஞ்சாயத்துகளின் நிர்வாகப் பொறுப்பில் வரவேண்டியவை: