பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



1. கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்.

அ. தனியார் பள்ளியாக இருந்தாலும் அந்தப் பள்ளியின் ஆட்சிக் குழுவில் பஞ்சாயத்துத் தலைவர் அலுவல் ரீதியாக இடம் பெறவேண்டும்.

ஆ. பஞ்சாயத்து தலைவருக்கு, பள்ளியைப் பார்வையிட்டு வழிகாட்ட உரிமை இருக்க வேண்டும்.

2. மருத்துவ மனைகள் (கல்விக்குக் கூறியது இதற்கும் பொருந்தும்.)

3. நூலகம், 4. குடி தண்ணீர் வழங்கல், 5. சுகாதாரம், 6. மின் விளக்குகள் எரித்தல், 7. கிராமப்புறச் சாலைகள்.

மற்றும் கிராமத்தில் எந்தவிதமான அரசு நிறுவனம் இருந்தாலும் அதில் ஊராட்சிமன்றத் தலைவர் பங்குபெறும் உரிமை இருக்கவேண்டும்.

கிராமத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவன அலுவலர்களும் ஊராட்சி மன்றத்தின் (பஞ்சாயத்தின்) ஆட்சிக்கு இணங்கி ஒத்துழைக்க வேண்டும்.

(மின்சார வாரியம், வேளாண்மை துறை, கால்நடைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, கிராம நிர்வாகம் முதலியன).

10. கிராமங்களில் எந்த ஓர் உடமையும் விற்பனை முதலியவை செய்வதைப் பதிவு செய்யும்போது, பதிவுத்துறை ஊராட்சி மன்றத்தின் சான்று கேட்டுப் பெற்றுச் செய்ய வேண்டும்.

11. மற்ற அதிகாரங்கள்:

1. கிராமத்தில் நடைபெறும் கள், சாராயம் தொடர்புடைய குற்றங்கள், விபசாரக் குற்றங்கள், சில்லறை விஷமங்கள், சில்லறைச் சச்சரவுக் குற்றங்கள், சுற்றுப்புறச் சுகாதாரக் கேடு செய்தல். இவைகளுக்கு ஊராட்சி மன்றங்களே விசாரித்துத் தண்டம் விதிக்கும் அதிகாரம் இருக்கவேண்டும்.