பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

101


புன்மை நெறி,மண் புதைந்துபோ கட்டும்!
நல்லது எதுவென நன்குதேர்ந் திடுமின்!
காலம் போற்றுமின்! நாளும் போற்றுமின்!
புதியன பேணுமின்! பொழுதெலாம் உழைத்து
ஒங்குநற் செல்வம் உலகினிற் குவிமின்!
உறவு கலந்துநீர் உண்டு மகிழுமின்!
எல்லாரும் ஒர்குலம் எனமுர சறைமின்!
இதுதான் நல்ல காலம்என் பதுவே!
நல்லகா லத்தை நாம்படைத் திடுவோம்!
பொங்கல்நன் னாளில் புதிய பாரதம்
படைத்திட உறுதி யெடுப்போம்! வருகவே!