பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
வாழ்த்தும் இரங்கலும்


1. அண்ணல் நபி நாயகம்


        மலர்தலை உலகில் இருளகற்றி ஒளியேற்றிப்
        புகழ் பெற்றார் அண்ணல் நபிகள் நாயகம்!
        நானிலத்திற்கு நல்வழிகாட்டிய அண்ணல் நபிகள் நாயகம்
        உபதேசத்தால் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டினார்
        கடுந்தவம் மேற்கொண்டு அவம் நிகழ்வதிலும்
        இயல்பான வாழ்க்கையில் அன்பும் அறனும் அருளும்
        பொலிவுறும்படி செய்ய இயலும்
        என்பதற்கோர் எடுத்துக் காட்டு, பெருமானார் நபிகள்
        வாழ்க்கை!
        கடவுளை நம்பினார்
        கடவுள் தந்தருளிய திருமறையை
        மண்ணுலக மாந்தர்க்குத் தந்தருளினார்!
        நாளும் ஐந்து தடவை அல்லாவைத் தொழுக
        என்று ஆணையிட்டார்!
        சிலையை நீக்கிச் சிந்தையில் தொழுகெனப் பணித்தார்.
        ஈட்டத்தில் ஒருபகுதியை ஈத்துவப்பது
        கருணையல்ல - கடமை என்று நெறி வகுத்தார்
        சமாதானம் பேணுக என்றார்!