116
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
திணை: வாகை துறை: வல்லாண்முல்லை
திங்கள் திரிதரு ஞாலத் தோங்கிய
திங்கள் மரபெனத் திகழ்தரு சீர்மை
முன்னைச் சோழர் மூத்தநின் மரபினர்;
வலங்கொள் தானை நிலம்புடை பெயரச்
சென்று வடபுலப் பனிமலை மார்பில்
பூவுல கதிரப் புவிப்பொறி நாட்டிப்
புகழொடு மீண்டு பொலிந்தனர் அவர்போல்
வலிவும் வளமும் மலிந்தநற் சோழ
மண்ணகத் தாருர் மாட்சியில் தோன்றிய
அண்ணல் கலைஞ, முன்னோர் அடிச்சுவ(டு)
ஒட்டிநீ இந்நாள் உறுபுகழ் சேர்த்தனை!
சிந்து வளங்கொழி சீமையில் அன்னைக்
காவிரி ஈன்ற தலைமகனாம்நீ
கங்கைவாழ்த் துரைக்கச் சிந்துபூச் சொரிய
சிங்கநேர் மறக்குலச் சீக்கிய மக்கள்
நின்சீர் பரவிடத் தன்புகழ் நாட்டி
மறத்தமிழ் மாண்பினைத் திறத்துடன் காட்டி
எழிலார் புகழும் ஈடிலா வெற்றியும்
ஈட்டி வந்தனை "எந்தமிழ் மறவ,
அற்றைநாள் தென்புலத் தரசர் வடபுலம்
வாழுநர் தமக்குப் பெருஞ்சோ றளித்த
பெற்றியை அறிவேம்! பின்னைநீ அவர்தம்