இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நல்ல மேய்ப்பர்; நல்ல மேய்ப்பர்;
மண்ணகம் நல்ல புண்ணியம் செய்து
பெற்றவோர் மக்கள் பேரா யர்இவர்!
சூட்டிக் கொண்ட பெயரால் மட்டுமே
ஆரோக்கிய சாமி யல்லர் இவரோ
அகநிலை யினிலும் புறநிலை யினிலும்
ஆரோக்கிய மான குணந லன்களை
அணிக லன்களாய்ப் பூண்டு வாழ்பவர்;
எந்தை யேசு பெருமான் அருளிய
"சமாதானம் சைய்து வைப்பவர்
பாக்கிய வான்கள் என்னும் உயர்ந்த
அமுத மொழியினுக் கிலக்கிய மானவர்;
புரவலன் போலும் தோற்றம்; உறழ்கொள
இரவன் மக்களின் பணிமொழி பயிற்றி"ப்
பாங்குடன் திருவருட் பேரவை மாநிலத்
தலைவராய் அமர்ந்துஇவர் நாளும் பணிசெயும்
பணிகளுக் கேதுகைம் மாறுகடப் பாடு,
ஐய, ஆண்டகையே!
வாழ்க, பல் லாண்டுநின் வாழ்நாள் வரையில்
யாமும் வாழிய நினைவாழ்த்து தற்கே!