பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


8. மக்கள் பேராயர் வாழ்க!

 நல்ல மேய்ப்பர்; நல்ல மேய்ப்பர்;
 மண்ணகம் நல்ல புண்ணியம் செய்து
 பெற்றவோர் மக்கள் பேரா யர்இவர்!
 சூட்டிக் கொண்ட பெயரால் மட்டுமே
 ஆரோக்கிய சாமி யல்லர் இவரோ
 அகநிலை யினிலும் புறநிலை யினிலும்
 ஆரோக்கிய மான குணந லன்களை
 அணிக லன்களாய்ப் பூண்டு வாழ்பவர்;
 எந்தை யேசு பெருமான் அருளிய
"சமாதானம் சைய்து வைப்பவர்
 பாக்கிய வான்கள் என்னும் உயர்ந்த
 அமுத மொழியினுக் கிலக்கிய மானவர்;
 புரவலன் போலும் தோற்றம்; உறழ்கொள
 இரவன் மக்களின் பணிமொழி பயிற்றி"ப்
 பாங்குடன் திருவருட் பேரவை மாநிலத்
 தலைவராய் அமர்ந்துஇவர் நாளும் பணிசெயும்
 பணிகளுக் கேதுகைம் மாறுகடப் பாடு,
 ஐய, ஆண்டகையே!
 வாழ்க, பல் லாண்டுநின் வாழ்நாள் வரையில்
 யாமும் வாழிய நினைவாழ்த்து தற்கே!