பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


12. கொப்பனாயட்டி
திரு. நா. அருணாசலம் செட்டியார்
மணிவிழா வாழ்த்து

        மண்ணிற்கு அணியாய் மழைக்குத் துணையாய்க்
        கொப்புக ளுடனே குளிர்நிழல் வழங்கும்
        மரங்கள் நிறைந்து மாண்புகழ் சேர்க்கும்
        புண்ணிய பூமியாம் இந்திய பூமியில்
        கொப்பனா பட்டியில் செழித்ததன் மரங்களின்
        கொப்புகள் போலே செழித்த கிளையுடன்
        விளங்கும் புகழ்க்குடி மு.ப.மு. குடியின்
        வழிவழிச் சிறந்த மரபினில் வந்த
        அருணா சலம்எனும் அண்ணல்வா ழியவே!
        வாழ்வாங்கு வாழ வழிகாட்டு கின்ற
        வள்ளுவத் தின்வழி வான்பொருள் தேடும்
        வழிகள் பற்பல! "இயற்றலும் ஈட்டலும்
        காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது
        அரசு!" எனும் குறள்நெறிக் கிலக்கண மாக
        வாழ்அரு ணாசல அண்ணல்வா ழியவே!
        ஈட்டிய செல்வத் தினைஆன் மாக்களின்
        அறியாமை நீக்கக் கல்வி நிலையமும்
        உடற்பிணி நீக்க மருத்துவ நிலையமுமாய்த்
        தந்துத வியதோர் தாளாண்மை யுடையாய்!
        வாழ்க, நீ வளமார் வாழ்க்கைத் துணையுடன்
        மங்கல மனையறத் துப்பய னாகிய
        நன்கலத் துடன்நீ நலமெலாம் பெருகிப்
        பலநூறு பிறைகள் கண்டு
        உலகினில் வாழ்க! வளர்க! வா ழியவே!