132
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
மண்ணிற்கு அணியாய் மழைக்குத் துணையாய்க்
கொப்புக ளுடனே குளிர்நிழல் வழங்கும்
மரங்கள் நிறைந்து மாண்புகழ் சேர்க்கும்
புண்ணிய பூமியாம் இந்திய பூமியில்
கொப்பனா பட்டியில் செழித்ததன் மரங்களின்
கொப்புகள் போலே செழித்த கிளையுடன்
விளங்கும் புகழ்க்குடி மு.ப.மு. குடியின்
வழிவழிச் சிறந்த மரபினில் வந்த
அருணா சலம்எனும் அண்ணல்வா ழியவே!
வாழ்வாங்கு வாழ வழிகாட்டு கின்ற
வள்ளுவத் தின்வழி வான்பொருள் தேடும்
வழிகள் பற்பல! "இயற்றலும் ஈட்டலும்
காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது
அரசு!" எனும் குறள்நெறிக் கிலக்கண மாக
வாழ்அரு ணாசல அண்ணல்வா ழியவே!
ஈட்டிய செல்வத் தினைஆன் மாக்களின்
அறியாமை நீக்கக் கல்வி நிலையமும்
உடற்பிணி நீக்க மருத்துவ நிலையமுமாய்த்
தந்துத வியதோர் தாளாண்மை யுடையாய்!
வாழ்க, நீ வளமார் வாழ்க்கைத் துணையுடன்
மங்கல மனையறத் துப்பய னாகிய
நன்கலத் துடன்நீ நலமெலாம் பெருகிப்
பலநூறு பிறைகள் கண்டு
உலகினில் வாழ்க! வளர்க! வா ழியவே!