136
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பூவுலகில் புகழ்பூத்து வாழ்ந்தோர் வரலாறு
நந்தம் வாழ்க்கைக்கோர் உந்து சக்தி!
வரலாறு தரும் படிப்பினையை
ஏற்றுப் போற்றிடின்
குறைகள் நீங்கும் நிறைகள் பெருகும்!
குணக்குன்றெனத் திகழ்ந்தகுலச் சிறையார்
கொல்லாமை மறைந்தொழுகிய சமண்பாவியரைப்
புறம் வேர்த்துக் காட்டாது அகம் வேர்த்து
நந்தம் குலதெய்வமெனச் செஞ்சொல் சேக்கிழார்
போற்றிய
மங்கையர்க் கரசியார் குறிப்பு வழி நின்று
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
சராசரமெல்லாம் சிவம்பெருக்கிய பிள்ளையார்
ஞானத்தின் திருவுரு ஞானசம்பந்தரின் துணைகொண்டு
செந்தமிழும் சிவநெறியும் தமிழ்மரபும்
காத் தருளிய குலச்சிறையார் புகழ்போற்றும்
மணமேற்குடி குலச்சிறையார் பேரவையினர்
குணம் போற்றி! அருந்திறல் போற்றி வாழ்த்துவோம்!