வாழ்த்தும் இரங்களும்
139
செந்தமிழும் சிவநெறியும் வளர்த்து வரும்
திருவாவடுதுறை ஆதீனம்
சீர் வளர் சீர் குருமகா சந்நிதானம்
சரா சரமெல்லாம் சிவம் பெருக்கும்
சிவப்பிரகாசம் எனும் திருநாமம் கொண்ட தேசிக!
நின் அருட் செங்கோலின் கீழ்
எல்லாரும் உள்ளோம் என்பதே
இதயத்திற்கு இதம்!
நின் அருட் பார்வையில்
சீருடன் நடைபெறும்
அம்பலவாண் தேசிகர் நடுநிலைப்பள்ளி
நூற்றாண்டு விழாக் காண்பது
அளப்பரிய மகிழ்ச்சி தருகிறது!
ஆயினும் ஒரு குறை!
நின் அருட் பார்வையில் நடைபெறும் பள்ளியில்
பயிலும் மாணாக்கனாக இலாது போனோமே!
இன்று பயிலுவோர் பேறு பெற்றவர்
பள்ளி வளர்க! பலநூற்றாண்டு வளர்க!
நின் அருட் கொற்றம் வளர்க! வாழ்க!