பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

147




"அப்பா"வை மறந்து "டாடி" என்றும்
பேசும் நிலையில் பொங்கல் விழாவா?
ஏ!எந் தமிழர்காள்! தமிழினம் காப்பீர்
தமிழ் மானம் காப்பீர்! ஒருகுடி யாவீர்
தமிழையே கற்போம்! தமிழிலே கற்போம்
பொங்க விடுவோம்! அதுதமிழ்ப் பொங்கல்
"எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!”
இதுவே நமது இலட்சிய மாகும்!
பொதிகைத் தமிழ் வாழ்க! பொங்குக, பொங்கலே!