பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

155




ஆண்டில் மூத்த நம்மை அழைக் காமல்
நின்னை அழைத்துக் கொண்டது
கொடுமையினும் கொடுமை!
மீண்டும் காலனைக் காலால் உதைத்து
நின்னைத் தந்திருந்தால்
தமிழ்க் கவிதா மண்டலம் வளரும்!
திருக்கோயில்கள் திருப்பணி நலம் பெற்றுப்
பொலிந்திருக்கும்!
திருத்தேர்கள் உலாவரும்!
ஏன் இறைவன் செய்யவில்லை!
கயிலையில் திருப்பணி செய்ய
நயந்து நின்னை அழைத்தனன் போலும்!
ஐய, சுந்தரம் அடிகள்! கேள்!
நின்னைத் தேடி வருவோம் நாம்!
அப்போது நின்குளிர் அன்பில்
திளைக்கும் பேறு கிடைக்கும்!
இது உறுதி!