156
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நாடு புகழ்ந்தேத்தும் நல்லபே ரறிஞன்
பாரினுள் ளோர்க்குப் பைந்தமிழ்ச் சாரதி
மலராடு சோலையில் வண்டாடு புதுமலர்
வழக்காடு மன்றத்தில் தேர்ந்த வழக்காடி
இன்னபுகழ் சேர்த்த எமதருமை அண்ணா
தாங்குபுகழ்த் தமிழினத்தின் தானைத் தலைவன்
ஓங்கியசீர்ப் பாரதத்திற் குற்ற தனித்தலைவன்
தரணிபுகழ் அன்னைத்தமிழின் தவப்புதல்வன்
வள்ளுவத்தை உலகுணர வைத்தவொரு வான்விளக்கு
தெள்ளுதமிழ் நெஞ்சில் தேன்சேர்க்கும் பேச்சழகன்
சிரித்த முத்தழகன் செந்தமிழின் நாவழகன்
இரக்கத் தனிஊற்றாம் ஏற்றத்தின் சாயல்
மலரினை மொய்த்து மயங்கிச் சுழன்றாடும்
வண்டாய்த் தமிழுலகம் வாயாரப் போற்றி மகிழ்ந்து
அண்ணா அண்ணாவென் றழைத்திடவே வாழ்ந் துயர்ந்த
எமதருமை அண்ணா எங்குற் றனைநீயோ?
நின்னை வளர்த்த தமிழ்மறந்து சென்றனையோ?
வேறுலகம் சென்றனையோ? விண்ணகந்தான்
போயினையோ?
பாரினில் பஞ்சைப் பராரிகள் வாழ்ந்திடவே
படியரிசி தானளக்க நிதிதேடிச் சென்றனையோ?
செகத்தில் சிறந்த சேலத்து நல்விரும்பை
விலைகூறச் சென்றனையோ வேறுசெயப்
போயினையோ?
நின்னைப் பிரிந்த தமிழ்என்ன ஆவதுவோ?