பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

159


தமிழ இனத்தைச் சார்ந்தது கருதியா?
குன்றக் குடியைக் குன்ற விடாமல்
நின்று விளக்கிட நினைத்தோ? இவரை
ஏற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணமோ?
ஒதுங்கி மடத்தில் உட்கார்ந் தவரை
மன்றில் நிறுத்தி வேடிக்கை பார்க்கவோ!
பிறந்ததாய் மொழியைப் பயின்றநாள் தொட்டு
தொண்டு நெறியின் சுவைதே நியநீ,
நம்மையும் தொண்டு நெறியினில் நடத்தித்
துரண்டக் கருதியோ? தொன்மையார் சிறப்பின்
தாரணி புகழும் தஞ்சை மண்ணில்
ஒருங்கே பிறந்தோம் எனும்பா சத்திலோ?
சென்ற நாட்களில் சில துறை ஏற்றுத்
தொண்டு செய்ததில் தொடர்ந்த துன்பத்தைக்
கண்டு களைந்திடுங் கருத்தது தானோ?
தமிழ்மொழித் துறையில் தக்கபே ரறிவு
இல்லை யெனினும் எழிற்றமிழ்ப் பற்று
மிக்கோர் என்னும் விரிந்த கருத்திலோ?
இழிசா தியெனக் கிடந்த இனத்தை
ஏற்ற முறச்செய் பெரியார் நம்மிடைக்
கொண்ட பாசம் குறித்தோ நினைத்தது?
எதுவென அறியோம், யாதுசெய் வதென
விளங்கவு மில்லை! வேண்டுவ தொன்று!
இன்றே போல்க உமது கேண்மை.
தாங்கு புகழார் தரணிக்கு நீசெயும்
பணிக்குடன் நிற்கும் வாய்ப்பளித் தமைக்கே
உளமார் நன்றி; உவந்துரை, செய்தோம்!
எழுபிறப் பும்யாம் உள்ளுவம் நினது
உழுவ லன்புத் திறம்வாழ்த் துதுமே!