பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


8. சிந்தனை

மானுடம் வலம்பட வாழ்தற்கு வாய்த்த
பயனுறு கருவிகள் பலவற் றுள்ளும்
சித்தம்என் பதுவே சீர்மிக் குடையது!
சிந்தித்தல் சித்தத் தின்தொழிற் பாடு
கண்ணால் காணும் காட்சியைக் கடந்து
செவியி லுற்றிடும் செய்தியைக் கடந்து
உணர்ச்சியைக் கடந்து உறும்ஆழ் நிலையில்
சித்தத்தில் வைத்தொரு செய்தியைப் பலபடச்
சிந்தித்துத் தெளிதலே சித்தத்தின் தொழில்!
சிந்திப் பவனே மனிதன்! சிறந்த
சிந்தனை யின்பயன் நன்னெறி வாழ்வு!
சிந்தை யின்பய னாகிய தெளிவில்
செழித்துக் கிடைக்கும் அறிவே சிறந்த
நலம்பல படைக்கும் நல்லறி வாமே!