இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்வாங்கு வாழ்தலில் வாய்த்தநல் அறிவு!
அறிவறிந்த ஆள்வினை யால்வந்த அறிவு,
ஐம்பூ தங்க ளாகி நின்றிடும்
இயற்கை வழங்கும் எழிலார் அறிவு;
உலகுக் குயிர்ப்பாய் உலவு மானுட
இயக்கத் தாலே வீழ்ந்தவித் தாகிய
வரலாற் றுத்திசை வழிதேறும் அறிவு;
கற்பவை கற்பத னாலாய அறிவு;
தம்மின் மூத்த அறிவுடை யோர்சொல்
வழியில் சேர்த்த மாண்பமை அறிவு
சித்தத் தினிலே இவையெலாம் சேர்த்து
அசைபோட் டுக்கடைந் தெடுத்ததோர் அறிவைப்
பலபட பகுத்து ஆய்வுசெய் திட்ட
பகுத்தறி வாலே தேர்ந்து தெளிந்த
அறிவுடை மையெனும் ஆற்றலிற் சிறந்த
கருவிபோ லுண்டோ பிறிதொரு கருவியே!