பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

213


47. மனோ நிலை!

தாயின் பாலைச் சுவைத்து மகிழும் மழலை
தாயின் மார்பகம் இனிய சர்க்கரை வைத்திருக்கிறது
என்றெண்ணுதல் இயற்கை!
ஆனால்,
தாயின் மார்பகத்தில் சர்க்கரை ஏது?
மழலையின் மகிழ்வில் மகிழும்
தாயின் பரிவே இனிப்புச் சர்க்கரை;
இனிமையின் இருப்பிடம் எது?
துன்பத்தின் இருப்பிடம் எது?
மனோ நிலைகளின் படைப்பே இன்பமும் துன்பமும்!
மனோ நிலைகள் இந்த உலகினைச் சார்ந்திருக்கின்றன
பயனுள்ள வாழ்வினை நடத்த
ஆளுமையும் நகைமுகமும் கூடிய
மனிதனாக வளர்க!
உன்றன் மனோநிலைகளை அமைவுற நிறுத்துக!
இனிமையும் தூய்மையும் நிறைந்த
மலரென ஆக்குக, நின்மனத்தினை!