பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


50. ஒத்துணர்வு!

ஒத்துணர்தல், இரக்க உணர்வு இவை இரண்டும்
இந்த வையகத்தின் உயிர்ப்புக்களாகும்!
அடிநிலை மனத்தின் செயல், ஒத்துணர்தல்!
விரிந்த இதயத்தின் செயற்பாடு ஒத்துணர்தல்!
அடுத்தவர் தேவைகளை உணர்தல்
ஒத்துணர்தலின் விழுப்பம்!
அடுத்தவர் அல்லால் எதுவாயினும் துடைப்பது
ஒற்றுணர்வாரின் உயரிய செயல்பாடு
மனித குலத்தின் வாழ்வுக்கு இரக்கம் தேவை!
எல்லாரும் ஒத்த அறிவு பெறுக!
உருவத்தில் பலரேயாயினும் இதயம் ஒன்று பெறுக!
அன்பு காட்டுக! இரக்கம் காட்டுக!
கருணைநலமும் நயந்து காட்டுக!
வையகம் வளர வழி, ஒத்துணர்தலேயாம்!