பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




56. விழித்தெழு!

"அருமை நண்பனே!"
எழு! விழித்தெழு!
நல்வாழ்வு வேண்டுமா?
உடன் எழு; விழித்து எழு!
விழிப்புணர்வுடன் இந்த உலகைக் காண்க! கேட்க!
நல்லவை கேட்க!
இங்கும் அங்கும் பயணம் செய்க!
பயன்பல அடைவாய்!
எந்த மனிதனும் சோம்பலால் உயர்வை அடைந்ததில்லை.
அடைய முடியாது!
சோம்பேறி நல்வாய்ப்புக்களுக்கு உறங்குவான்!
உறங்கிக் கொண்டே இருப்பான்!
அவன் திறமைகளும் தூங்கும்:
தூங்கும் பொழுது விழுகிறான்!
நிலாவும் தூங்குகிறது! சில பொழுது தூங்குகிறது!
ஆனால்,
நிலா எழுந்து உலா வந்தால்
பெரும்பயன் உண்டு! ஆதலால், விழித்தெழு!
வெற்றி பொருந்திய வாழ்க்கையை நடத்த
நனி உதவி செய்யும் விழிப்புணர்வு!
ஞாலத்தில் சிறந்த துணை விழிப்புணர்வு!
விழிப்புணர்வுடன் இரு! உயர் மதிப்புடன் வாழ்!