பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

231


65. பொறுத்தாற்றுக!

கால்கள் இரண்டும் இல்லாத ஒருவர்
ஓடும் பயிற்சி கற்றுத்தர வந்தால்
என்ன நடக்கும்?
பொறுத்துக் கொள்!
தவறுகளைப் பொறுத்துக் கொள்!
ஆம்! நம் ஒவ்வொருவரிடத்திலும்
இந்தத் தவறுகள் உள்ளன.
இரண்டுபேர் விளையாடினால்
ஒருவர்தானே வெற்றிபெற இயலும்!
வெற்றி வாய்ப்பே திறமையின் அளவு கோல்கள்!
திறமை உடையரேனும் சிலபோது தோற்பது உண்டு!
நீ, அடுத்தவனை உதைத்துத் தள்ளினால்
அவனுடைய மனக் கதவுகள் உனக்குத் திறக்கப்படாது!
பொறுப்பும் பொறுத்தாற்றும் பண்பும்
அமையாமல் வாழும்
எல்லா மனிதரிடத்திலும்,
உன்னிலும் மேலானவரிடத்திலும் தாழ்ந்தவரிடத்திலும்
அடக்கமாகப் பேசு!
மேலானவர்களை உளமாரப் புகழ்ந்து பேசு!
தாழ்ந்தவர்களை அணைந்துக் கொள்!
அப்போது உலகம் உனக்கு உடன்பட்டு
உன்னை அணையும்!