இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
268
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஒ, மனிதனே!
நீ தவறுகள் செய்வதில்லை என்று
உளமார உறுதிபூண்டால் எ
ல்லாம் நன்றாக நடக்கும்!
கோணல் இல்லாத மனச்சாட்சி பெறின்
கடவுளின் வரைபடத்தைக் கற்பவனாவாய்!
நீ ஒரு குரலாகப் பேசின்
அந்த ஒருகுரல் பல மனிதக் குரல்களை ஒக்கும்!
ஆம்!
ஒரு குரல் உடைய மனிதனாக
உலகம் ஏற்கும்! உலகவர் ஒப்புதல் பெற்ற குரல்
உரத்த நிலையில் உறுதியாய் ஒலிக்கும்!
உறுதி வாய்ந்த ஒழுங்குமுறை
உன்னுடைய நடைமுறையாக அமையின்
உன் இதயம் நீதியைச் சார்ந்து நிலவும்!
நீ களைப்பு நீங்கிப் புத்துயிர்ப்பு பெறுங்காலை
இன்பமும் அமைதியும் கொண்டு வரும்!
தலைசாய்த்துப் படுக்க
இலவம் பஞ்சுத் தலையணை தேடுவதுபோல
மெல்லிய மனத்துடன் உறங்கிடுக!
மனச் சாட்சியை!
மற்றவர் வசையிலிருந்து மீட்டுக் கொள்க!