பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


100. கானல் நீர் தாகம் திர்க்குமா?

ஒற்றுமை வேண்டும்; ஒருமைப்பாடு வேண்டும்!
ஆயினும் உதட்டளவில் ஒற்றுமை கவைக்கு உதவாதது!
நோக்கத்தால் ஆர்வத்தால் வேறுபட்ட மனங்களின்
ஒற்றுமை வெறும் மாயைத் தோற்றம்!
ஒற்றுமைக்கு இணக்கங்கள் தேவை!
உடன்பட்ட போக்குகள் தேவை!
ஒத்த கொள்கையுடைய வளர்ந்த மூளைகளே ஒன்றுபடும்!
இந்த உலகில் இது அபூர்வம்!
உடல் கீழ்த்திசை நோக்கிப் பயணம் செல்கிறது!
மனமோ எதிர்த்திசையாகிய மேற்கு நோக்குகிறது!
ஒற்றுமைத் தோற்றம் போதாது!
அது வெறும் கானல்நீர்!
கானல்நீர் தாகம் தீர்க்குமா என்ன?
நல்லிணக்கம் இல்லாத ஒற்றுமையால் பயன் என்ன?
வீணை இருக்கிறது! வீணைவாசிப்பவனும் அருகில் உளன்
ஆனால் வாசிக்கத்தான் மனம் இல்லை!
வீணைமட்டும் என்ன செய்யும்?
வீணைவாசிப்பவன் விருப்பத்துடன் வாசித்தால் தானே!
இனிய இசை கேட்டு மகிழலாம்!
இசைக் கருவியில் கீச் கீச் ஒலி கேட்டால்
இப்போதோ சிலபொழுதிலோ அது ஒடிந்து
பயனற்று போகப் போகிறது என்பது நிச்சயம்!
ஒற்றுமைப் பண்புகள் இல்லாத ஒற்றுமை
ஒன்றுக்கும் ஆகாது திருப்தியில்லை!
கருத்தொற்றுமையுடன் கூடிய ஒற்றுமை
மனநிறைவைத் தரும் மகிழ்ச்சியைத் தரும்!
மற்றவர் கருத்தைக் கேட்டுப்பெறும் பாங்கு ஒற்றுமைக்கு
அடித்தளம்
குஞ்சுப் பறவைகள் கூட்டுக்குள் ஒன்றுபட்டு வாழ்கின்றன!
ஆனால், நமது குழந்தைகளோ?
எழுதிக் காட்ட வேண்டுமா?