பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


102. சுருங்கப் பேசு!

வாழ்க்கை சுருங்கியது; வாழும் நாள்கள் சிலவே!
இச்சில நாளும் செயலுக்குப் பயன்பட வேண்டும்!
உயிர்க்கு ஊதியம் தேடவும் பயன்படவேண்டும்!
ஆதலால்,
செய்திப் பரிமாற்றங்களில்
பெரும் பொழுது போக வேண்டாம்!
சுருக்கமாகப் பேசுக! சுருக்கமாக எழுதுக!
ஒரு சிறு துண்டுத்தாளில் எழுதக்கூடிய செய்தியை
முழுநீளத் தாளில் சுற்றி வளைத்து எழுதுவானேன்?
பேசிப் பேசிப் பொழுது கழிப்பதேன்?
திரும்பத் திரும்ப "விழா" "விழா" என்று பேசுவதேன்?
சொல்லும் செய்திக்குத் தொடர்பில்லாத செய்திகளைச்
சொல்லுவதில் யாது பயன்?
சுருக்கமாகப் பேசவேண்டுமா? சிந்தனை செய்க!
சிந்தித்தலும் சிந்தித்த செய்திகளைச்
சிலசொல்வி விளக்குவதும் உயர்திறன்!
உயர் இலக்கியப் படைப்பெல்லாம் சுருங்கியனவே!
ஒளவையார் செய்த ஆத்திசூடியும்
வான்புகழ் வள்ளுவன் செய்த குறளும் ஒர்க!
சுருக்கமாகப் பேசு! முடித்துப் பேசு!
நீண்ட நாள் வாழவேண்டுமா? சுருங்கப் பேசு!