பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. காந்தியடிகள் - மகாகவி
பாரதிவிழாக் கவியரங்கம்
கோயம்புத்துரர் சிந்தனை மன்றம்
14-12-68 இல் நிகழ்த்திய
காந்தியடிகள்-மகாகவி பாரதி விழாக் கவியரங்கத்
தொடக்கக் கவிதை

        கொற்றவை தேவி கோலது ஒச்சும்
        கோவை நகர்சிந் தனைமன் றத்தினர்
        மானுடச் சாதியை மாண்புறச் செய்த
        கடல்சூழ் ஞாலம் கைதொழு தேத்தும்
        எந்தை அண்ணல் காந்தி யடிகள்
        உலகில் தோன்றி ஒருநூற் றாண்டு
        உருண்டோ டியதை உணர்த்தும் பொருட்டே
        எடுத்தனர் திருவிழா, எழில்பெற இன்றே!
        நாள்ஒன் றுக்கு நாற்பதா யிரம்பேர்
        பிறக்கின் றனர் அவர் பிறப்பதால் பயனென்?
        உறுபசிக் குண்டுடல் உறவதே கண்டு
        ஒயா துறங்கிக் கழித்திடு கின்றனர்!
        வாழ்க்கை சிற்பம் வளர்கலை சிற்பம்