பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


128. கடவுளை நம்பு!


கடவுளை நம்பு!
இன்றும் நாளையும் உத்தர வாதம் வேண்டுமா?
கடவுளை நம்பு!
பயத்திலிருந்து நம்மை மீட்பது கடவுள் நம்பிக்கை!
அச்சத்தை ஒழித்து ஆளுமையைத் தருவது கடவுள்
நம்பிக்கை!
மழை மேகங்கள் நலம் செய்யும்!
இரவு அமைதியைத் தரும்!
நம்பிக்கை என்ன சொல்கிறது!
அடியை எடுத்துவை! அடிமேல் அடியெடுத்து வை!
முன்னோக்கி நட! பயிர்களைப் பயிர் செய்!
பயிர்களைக் காத்துப் பயன்காண உழைப்போம்!
வீடுகளைக் கட்டுவோம்! தொழில்களை விரிவாக்குவோம்!
பள்ளிக்குச் செல்வோம்! தொழில்களைத் தொடங்குவோம்!
விடியலை எதிர்நோக்குவோம்! திட்டங்களைத்
தீட்டுவோம்!
திட்டங்களை நிறைவேற்றும் பணியில்
உலைவின்றித் தாழாது உழைப்போம்
நமக்கு நாமே எவ்வளவு நன்மை செய்து கொள்வோம்!
எவ்வளவு இயலுமோ அவ்வளவு செய்து கொள்வோம்!
பணிகளைப் பாங்குறச் செய்வோம்.
கடவுளிடம் ஒப்படைப்போம்!
இந்த வையகத்தில் வாழும் மாந்தருக்கெல்லாம்
நன்மை அருள்க என்று
இறைவனைப் பிரார்த்திப்போம்!
நாள்கள் நம்முடையன! இரவுகளும் அப்படியே!
விண்ணகத்தின் செயற்பாட்டில்
நாம் தூங்கும்பொழுதும் விளக்குகள் எரிகின்றன!
கடவுளே உன்னை நம்புகின்றேன்!
என்னை ஒப்படைக்கின்றேன்!
என் வாழ்நாள்கள் நின் பொறுப்பில் உள்ளன!
வழி காட்டுக! வழி நடத்துக!