பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



138. எது சரியானது?

மரம் வெட்டும் தொழிலில்
மரத்தூள்கள் விழும்பொழுது
நாம் மரம் வெட்டி முடிப்பதில் கவலைப்படுவதில்லை.
மரத்துரள்கள் இல்லையெனில்
மரம் வெட்டுதலும் இல்லை! மரமும் இல்லை!
எதிர்ப்பு இல்லையெனில் நிற்பார் யார்?
மனிதனும் இல்லை!
யார் பக்கலில் வேண்டுமானாலும் நில்!
ஆனால், அவன் சரியான வழியில் நிற்கும்பொழுதும் போ!
அவனே தவற்றின் தடத்தில் போகும் பொழுதும்
அவன் பகுதியாக நீயும் போ!
அவனைத் திரும்ப அழைத்து வரவேண்டுமே!
எது சரியானது?
ஆதரிப்பவர் யார்?
எதிர்ப்பவர் யார்?
என்பனபற்றி நினைக்காதே!
புகழையே அளவாக எண்ணி
நிற்பவர் பக்கம் நிற்காதே!
சலனப் புத்தியுடையோன் பக்கம் நிற்காதே!
சரியானது என்றும் நிலையானது!
சரியானது அழிவில்லாதது!
எந்தவழி சீரான வழி?
அறிந்து செல்க!