பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



154. முடிந்தவரை செய்

உன்னால் முடிந்த நல்லதைச் செய்!
இயற்கையும் கூட நன்றாகவே செய்கிறது!
ஒரு சிறு மழைத்துளி; ஈரப்பதத்தைத் தருகிறது!
ஒரு விண்மீன், போதிய ஒளியைத் தருகிறது!
மனிதன் உற்பத்தி செய்ய வேண்டியவன்
அவன் எவ்வளவு உற்பத்தி செய்யமுடியுமோ
அவ்வளவுக்கு உற்பத்தி செய்தாலே மனிதனா வான்!
இயற்கை முழு ஆற்றலுடன் செயல்படுகிறது!
மனிதனும் இயற்கையைப்போல் செயல்படவேண்டும்
ஆற்றலுக்கு இசைந்தவாறு வாழ்தலே வாழ்க்கை!
வாழ்க்கையை ஆற்றலுக்குக் கீழ் இயக்குவது தவறு
உன் ஆற்றலுக்கு இசைய நீ வாழ்ந்தால்
இயற்கை நியதிகள் உன்னை உயர்த்தும்!
உன் வாழ்நிலை முயற்சிக்கு ஏற்ப
வாய்ப்புக்களும் வந்தமையும்!
உன் முயற்சியின்மையால் வாய்ப்புக்களை நழுவ விடாதே!
உன் ஆற்றலுக்கு ஏற்ப உழைத்திடுக
கடவுளை நம்பு!
மீதியைக் கடவுள் கவனித்துக் கொள்வார்!
தேவதைகள் வேறு என்ன செய்து விடும்?