பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

351


175. நன்றி!


நன்றி! - மூன்றெழுத்துச் சொல்!
நன்றி! - இம்மூன்றெழுத்துச் சொல்லுக்கு இணை ஏது?
நன்றி சொல்லிப்பழகுக!
நன்றி இயல்பாகக் கூறு! உண்மையாகக் கூறு!
நன்றி கூறுதல், பெற்ற உதவியின் தரத்தன்று!
நன்றி கூறுவது பெரிய மனதின் விளைவு.
நன்றி சொல்லும் பண்பு, வாழ்க்கையைத்
துன்பத்திலிருந்து மீட்டுத்தரும்
நன்றியறிதல் - கூறல் பெருந்தன்மையின் பாங்கு!
நன்றி மகிழ்வளிக்கும்! எல்லையற்ற மகிழ்வளிக்கும்.
நன்றியைப் போல வேறு எது இன்பம் தரும்.
நன்றியே திருப்பியளிக்கும் வாயில்!
நன்றி கைம்மாறு ஆதல் உண்டு!
நன்றி அறிக! நன்றி கூறுக!
இதுவே கடப்பாடு!