பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

367


190. பிரார்த்தனை செய்

உன் கால்களில் நிற்கும் துணிவு உண்டா?
கடவுளைப் பிரார்த்தனை செய்!
இறை நலம் அடைவாய்!
ஆன்மாவிற்குள்ளிருந்து பல ஆக்கங்களும் பெறுவாய்!
அந்த ஆக்கங்கள் பலம் தரும்!
முட்டாளாகவும் இருக்காதே!
கடவுளாகவும் முயற்சி செய்யாதே!
கடவுளிடம் விண்ணப்பத்தைக் கொடு!
நிதானமாக நினை! விவாதம் செய்!
தெளிந்த முடிவுகளை விண்ணப்பம் ஆக்குக!
பிழையெலாம் தவிரப் பணிக்கும்படி வேண்டுக!
சோதனைகளிலிருந்தும் இடர்களிலிருந்தும்
எடுத்துக் காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்க!
இலக்குகள், ஆர்வங்கள்
இவற்றை வாழ்த்தும்படி பிரார்த்தனை செய்க!
திருவருளுடன் தொடர்பு கொள்க!
திருவருளுடன் ஒன்றுக!
இதுதான் பிரார்த்தனை!